சென்னை

ன்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கர் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் கதையை ஷங்கர் எழுதி இருந்தார்..  ஆனால் பலரும் இந்த படத்தின் கதை தங்களுடையது என உரிமை கொண்டாடினார்கள்,

கடந்த 2010 ஆம்  ஆண்டு இந்த படம் தன்னுடைய ஜூபிடர் என்னும் நாவலைத் திருடி எழுதிய கதை என ஆரூர் தமிழ் நாடன் என்பவர் காவல்துறையில் புகார் அலீத்தார்.  இதன் அடிப்படையில் ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் இதற்காக அரூர் தமிழ் நாடன் ரூ 1 கோடி இழப்பீடு கேட்டுத் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது  என்பதால் இந்த  வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு  மீதான விசாரணை நீதிபதி வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வவ்ந்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  ஷங்கர் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவு இட்டுள்ளார்