சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது.

தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் செய்தார். புகாரை ஆணையத்தின் அப்போதைய துணை தலைவர் எல்.முருகன் விசாரித்தார். பிறகு இவர் மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

கடந்த 2019 ஆம் அண்டு பா.ஜ.க., மாநில தலைவராக எல்.முருகன் பதவி வகித்தபோது, வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாகப் பேசியபோது, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த நிலத்தின் மூலப்பத்திரத்தை  காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பி சில கருத்துகளைத் தெரிவித்தார்.

எனவே எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்., சடடமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எல் முருகன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அவர், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று வழங்கினார்.

அந்தி தீர்ப்பில்,

”எல் முருகன் முரசொலி அறக்கட்டளை குறித்து அளித்த பேட்டி, அனைத்து ஊடகங்களிலும், மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த அவர் கருத்தை நேர்மையாகத் தெரிவித்துள்ளார் எனவும் கருத்துக்கூற அவருக்கு அரசியல் சட்டத்தின்படி உரிமை உள்ளது என்றும் வாதிடப்பட்டது.,

ஆயினும் இதையெல்லாம் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையின் மூலமே உறுதி செய்ய முடியும்.  ஆகவே எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். அமைச்சர் மீதான இந்த வழக்கை 3 மாதத்துக்குள் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்”.

என்று நீதிபதி கூறியுள்ளார்.