சென்னை

றைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது.

ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பி ஏ ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி A.ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையம், தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு அக்டோபர் 17ல், சமர்ப்பித்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசிடம் ஜூலை 9-ம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.