சென்னை

ருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% வழங்கியது குறித்து மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.   ஏற்கனவே நீதிமன்றம் அளித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை எனத் தெரிவித்த திமுக இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு விசாரணையில் மாநில இட ஒதுக்கீட்டை 50% மிகாமல் அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது.  ஆனால் இதற்கு திமுக மறுப்பு தெரிவித்து புதிய கேள்வி ஒன்றை எழுப்பியது.

தனது வாதத்தைத் தானே  மீறும் வகையில் மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பது எப்படி என திமுக வினா எழுப்பியது.   இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.