சென்னை

சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது.

சென்னை சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக, வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.  மாநகராட்சி  அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தற்போது மழைநீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது.  இதன்படி கட்டணமில்லா எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.