சென்னை: இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் அரசு வாகனங்கள் என்பதை குறிக்கும் வகையில், ‘அ’ மற்றும்  ‘G’ எழுத்துக்கள் பதியப்படு வது குறித்து காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அரசு வாகனம் அல்லாத வாகனங் களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்கு வரத்து காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறவிப்பில், அரசு வாகனம் அல்லாத வாகனங்க ளில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) G அல்லது அ என்ற  எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது  Sticker ஒட்டப்பட்டோ  மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப் படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு  மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது.

எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற  தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே G அல்லது அ என்ற  எழுத்துக்கள்  பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமை  ஆக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற  எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது  மோட்டார் வாகன சட்டத்தின்  கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.