சுக்மா: சிஆர்பிஎஃப் வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்திஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில்  லிங்கம்பள்ளி என்ற கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப்.-யின் 50வது படை பிரிவின் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர்,   அதிகாலை 3:30 மணிக்கு தனது  ஏ.கே.47 ரக துப்பாக்கியால்,  சக வீரர்களை நோக்கி கண்மூடித் தனமாக சுட்டார். இதில் 4 வீரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 3 வீரர்கள் பலத்தகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்ட சகவீரர்கள், அவரை உடனே மடக்கி பிடித்தனர். அவரிடம் உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பணி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்ததில் அவர் துப்பாக்கியால் சகவீரர்களை சகட்டுமேனிக்கு சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.