சென்னை:
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.