சென்னை

டுத்த 3 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இடையில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் சற்றே நிம்மதி அடைந்திருந்த மக்கள் தற்போது வெயில் அதிகரிப்பால் மிகவும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வளி மண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மேலும் திருநெல்வேலி, தென்காசி, கன்யாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மற்றுமுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படலாம்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN, Next 3 days, chances for rain,