சென்னை:
மிழகத்தின்  8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை , சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.