சென்னை: தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாளை தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால், அதன் காரணமாக, தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.