சென்னை:
மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குதிசை காற்றின் வீக்க மாறுபாடு காரணமாக நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.