சென்னை:
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவக் காற்று காரணமாகத் தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, சேலம், கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் வரும் 2-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும், அடுத்த ஐந்து நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அரபிக் கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.