சென்னை: 
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும்,  நீலகிரி, கோவையில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.