சென்னை:
ட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். அவரது பேச்சின் இடையே குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் என்னைப் புகழ்ந்து பேசுவதை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நேற்று கூறியிருந்தேன். இன்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் என்னைப் புகழ்ந்து பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.