சென்னை: 
மிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, சேலம் தஞ்சை உள்ளிட்ட  12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.