சென்னை:
மிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.