சென்னை:
விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணாமாக, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வ்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.