சென்னை,

மிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் 29 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில்,  தற்போது பெய்து வரும்  மழை வரும் 6-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.