ஸ்ரீநகர்: மத்திய பாஜக அரசு பிரித்தாளும் கொள்கையின் மூலம் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி வாக்குகளை பெற்று வருகிறது என்று  காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லி வந்துள்ள  ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான  மெஹபூபா முப்தி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மத்திய அரசு “பிரித்து ஆளும்  கொள்கையில் செயல்படுவதாகவும், மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே அதன் நோக்கம் என்றும் குற்றம் சாட்டினார்.

ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற தலைவர்கள் ஜம்மு -காஷ்மீர் பற்றி ஒரு பார்வை கொண்டிருந்தனர். ஆனால், தற்போது டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு -காஷ்மீரை ஒரு ஆய்வகமாகப் பயன்படுத்தி இங்கு சோதனை செய்கிறார்கள். மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கி  ஆட்சி செய்வதே அவர்களின் கொள்கை – அவர்களின் பார்வை மக்களை பிரித்து தங்கள் வாக்குகளை அதிகரிப்பதாகும்.

நாடு முழுவதும் உள்ள சாலைகள், நிலையங்களின் பெயர்களை மாற்றியதற்காக பாஜக தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர், அவர்களுக்கு  வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு எதுவும் இல்லை என்றும்,  “எல்லை நிர்ணயப் பயிற்சி தற்செயலாக செய்யப்படுகிறது. அவர்கள் பெயர்களை மட்டும் மாற்றுகிறார்கள் (பள்ளிகளுக்கு தியாகிகள் என்று பெயர் சூட்டுகிறார்கள்) ஆனால் குழந்தைகளுக்கு பெயர்களை மாற்றுவதன் மூலம் வேலை கிடைக்காது. அவர்கள் (மையம்) தலிபான், ஆப்கானிஸ்தான் பற்றி பேசுகிறார்கள் ஆனால் விவசாயிகள், வேலையின்மை மற்றும் ஊழல் பற்றி பேசுவது கிடையாது என்றும் சாடினார்.  அவர்களுக்கு “சர்தார்கள் இப்போது காலிஸ்தான், நாங்கள் பாகிஸ்தான்காரர்கள் என்றும் விமர்சித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் (UT) வேலையின்மை விகிதம் 18% ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஜம்மு -காஷ்மீரின் பொருளாதாரத்தை திணறடித்து வருகிறது. எங்கள் பொருளாதாரம் எதிர்காலத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் சார்ந்துதான் இருக்கும். கடந்த ஏழு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில்  மத்திய அரசு எந்த வேலையும் செய்யவில்லை. நாட்டில் நம்மிடம் உள்ளதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள் அவ்வளவுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.