டெல்லி:

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதற்காக ரூ.39 ஆயிரத்து 565 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.

மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இந்த நிதியே போதாது என்று கருத்து எழுந்து வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 748 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பது தமிழக அரசையும், விவசாயிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.