சென்னை:
துரை விமான நிலையம் சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரின் செல்போனை பிடுங்கியுள்ளார். அதேபோல் அவர் பேசியதை ஃபேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், விமான நிலைய பேருந்தில் பழனிசாமியை தரைக்குறைவாக பேசி வீடியோ பதிவிட்ட ராஜேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.