சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரித்து சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

தேனியில் இந்த புகைப்படங்களை போஸ்டராக சில இடங்களில் ரசிகர்கள் ஒட்டி இருக்கிறார்கள். வழக்கம் போல விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டப்படும் போஸ்டர் போலத் தான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

எம்ஜிஆர் போல விஜய் இருக்கும் இந்த புகைப்படம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்யின் இந்த போஸ்டர் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் “மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகி விட முடியுமா” என கூறி கிண்டல் செய்திருக்கிறார்.

தேனியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்து எரிந்திருக்கிறார்கள். மேலும் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக தேனி போலீசார் விஜய் ரசிகர்கள் மீது. வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.