சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி – ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. அதனால், காவல அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது 2020-இல் கொண்டு வரப்பட்டது. எனவே விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க முடியாது. இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேறு வகையில் சரி செய்ய முடியுமா என்று தேர்வு ஆணையத்தில் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழ்நாட்டில், இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடதக்கது.