சென்னை

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட மனு பெற வந்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுகளுக்காக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.   ஏற்கனவே இந்த பதவியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பதவிகளுக்குப் போட்டியிட இன்று சுமார் 5க்கும் மேற்பட்டோர் முன் வந்தனர்.  ஆனால் அவர்களை வேட்புமனு பெற முடியாமல் அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது.   மனு அளிக்க வந்தவர்கள் அமமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.