சென்னை

தென் மாவட்ட ரயில்கள் தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும்.   இந்த விழா மேல் மருவத்தூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  அதன்படி ரயில்கள் வரும் 13 முதல் 19 வரை இங்கு ஒரு நிமிடம் நின்று செல்ல உள்ளன.

அதன்படி, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

அதைப் போல, ராமேசுவரம்-புவனேசுவர் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-லோகமானிய திலக் குர்லா வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-பனாரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை (மயிலாடுதுறை வழி) வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் 19-ந் தேதி வரை இயக்கப்படும் நாட்களில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.