கோயம்புத்தூர்: பக்கவாதம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள நோயாளிகளையும் 4½ மணி நேரத்தில் காப்பாற்ற லாம் என தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும்  மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், இது நவீன இந்தியாவின் சுகாதாரப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள்  முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் பக்கவாதம் நோயின் பாதிப்பு குறித்தும், அதை குணப்படுத்துவது தொடர்பாகவும் பக்கவாதம் பாதிப்பை பற்றிய மேலாண்மை அறிவுடன் கூடிய விரிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.  பக்கவாதத்திற்கு சிகிச்சையளிப்பதில் காலம் மற்றும்  நேரம்  முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் சிகிச்சையை குறிப்பிட்ட  காலத்தில்  குறிப்பிட்ட  கால அளவில் முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு செயல்பட்டால்,  4½ மணி நேரத்தில் ஓர் உயிரை காக்கலாம் என தெரிவித்து உள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பக்கவாதம் மேலாண்மை மற்றும் பக்கவாதம் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை இங்கே பார்க்கலாம்.

மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு அல்லது உடைப்பு காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டம் தடைபடும் போது மனித உடலில் ஒரு பக்கவாதம் ஏற்படுகிறது. இது இறுதியில் மூளை செல்களின் இறப்பை ஏற்படுத்துகிறது. போதிய ஆக்ஸிஜன் இன்மை மற்றும் உயிரணு இறப்பின் விளைவாக, அது மூளைக்கு  சேதத்தை  ஏற்படுத்துவதால்  மீளமுடியாத பாதிப்பாகவோ மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் மேலாண்மை (The Management Of Ischemic Stroke)

அக்யூட் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் – Acute Ischemic Stroke  (AIS) என்பது பொதுவாகக் கூறப்படும் பக்கவாதங்களில் ஒன்றாகும். இரத்த நாளத்தில் உறைதல் காரணமாக ஆக்ஸிஜன் விநியோகத்தில் குறுக்கீடு ஏற்படும் போது AIS ஏற்படுகிறது. AIS க்கு  அவசர மருத்துவ உதவி தேவைபடுகிறது. ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரை காக்க முக்கியமாகிறது. இஸ்கிமிக் ஸ்ட்ரோக் (Ischemic Stroke) தொடங்கிய உடனேயே ஒவ்வொரு நிமிடமும் இரண்டு மில்லியன் நியூரான்கள் இறக்கின்றன என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மருத்துவத் துறையில் ஒவ்வொரு முன்னேற்றமும் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இதேபோல், பக்கவாத சிகிச்சையும் ஒரு கொடிய சூழ்நிலையிலிருந்து மக்கள்களை மீட்பதற்காக பல  பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. மிகவும் பரவலாக நிரூபிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு சிகிச்சைகள்:

IVT- நரம்பு த்ரோம்போலிசிஸ் (Intravenous Thrombolysis)

EVT- எண்டோவாஸ்குலர் சிகிச்சை – Endovascular Treatment (i.e Mechanical Thrombectomy)

இந்த முறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பக்கவாதம் சிகிச்சையில் நிஹிலிசம் (Nihilism) பரவலாக நடைமுறையில் இருந்தது. பக்கவாத சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், பக்கவாதம் பற்றிய அடிப்படை முன்னெச்சரிக்கை அறிவு  மிக முக்கியமானது, ஏனெனில் அது உடனடி நடவடிக்கை எடுக்க உதவும். FAST என்ற சுருக்கெழுத்து பக்கவாதம் காட்டக்கூடிய அறிகுறிகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும்.

F: Facial Droop – முகத்தின் ஒரு பக்கத்தில் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும்

A: Arm Drift – ஒரு கை சறுக்கலாக  இருக்கும்

S: Speech – மெல்லிய மற்றும் முணுமுணுப்பு பேச்சு பொதுவாக செவிக்கு புலப்படாது

T: Time – மருத்துவ உதவி பெற நேரம்‘

ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கபட்டாலோ, குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலோ, அவசர சிகிச்சைப் பிரிவை அ ணுகுவது மிக முக்கியமானதாகும். அவருக்கு நான்கரை மணி நேரத்திற்குள், நோயறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நோயாளியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பதற்கான அறுபது நிமிட சிகிச்சை மற்றும் நடைமுறை பற்றிய  விளக்கங்கள்:

சுமார் பத்து நிமிடங்களில், நோயாளிக்கு அவசர மருத்துவர் வருகை தருகிறார்.

சுமார் பதினைந்து நிமிடங்களில், நோயாளி நரம்பியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்படுகிறார்.

சுமார் இருபத்தைந்து நிமிடங்களில், மாறுபட்ட CT brain scan   ஸ்கேன் மற்றும் MRI சம்பந்தப்பட்ட நோயறிதல் நெறிமுறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது.

நாற்பத்தைந்து நிமிடங்களில், scan results  பொதுவாக வந்துவிடும் அதன் பின் நிலைமையை பகுப்பாய்வு செய்து சிகிச்சை பற்றி விவாதிக்கப்படுகிறது.

அறுபது நிமிடங்களில், நோயாளி த்ரோம்போலிடிக் (thrombolytic) சிகிச்சையுடன் தொடங்கப்படவேண்டும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் நான்கரை மணிநேர உயிர் காக்கும்  அவசரகாலத்திற்க்குள் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டால், கட்டியை உடைப்பதற்கோ அல்லது கரைப்பதற்கோ, த்ரோம்போலிடிக்

(thrombolytic) முறை நோயறிதலுக்குப் பிறகு உடனடியாக நரம்பு வழியாக ஊசி போடப்படும். மூளையின் பெரிய நாளத்தில் உறைதல் இருக்கும் போது, ​​த்ரோம்போலிடிக் (thrombolytic) முறையுடன், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி (mechanical thrombectomy) மூலம் உறிஞ்சப்படுவதனால்  உறைதலை அகற்ற உதவுகிறது. பக்கவாதம் தொடங்கிய நான்கரை மணிநேர அவசரகாலத்திற்க்குள் நோயாளியை  மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்காமல், காலம் தாழ்ந்து வரும் சந்தர்ப்பங்களில் 24 மணிநேரத்தில் நேரடியாக த்ரோம்பெக்டோமி (thrombectomy) மூலம் மூளையின் பெரிய நாளத்தில் அடைப்பு இருந்தால் அதை நீக்க உடனடியாக   திட்டமிடப்படும்.

பின்புற சுழற்சி பக்கவாதம் நிலையில், உயிர் காக்கும்  அவசரகாலம்  த்ரோம்போலிசிஸ் (thrombolysis) ஆறு மணிநேரம் மற்றும் த்ரோம்பெக்டோமி (thrombectomy) க்கு இருபத்து நான்கு மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கிற்கு இரண்டு சிகிச்சை விருப்பங்களும் அனுபவமிக்க  மருத்துவ வல்லுநர்கள் மூலம்  வழங்கப்படுகிறது.

உடலில் பெரிய தாக்கங்கள்  இல்லாமல் மக்கள் தங்கள் இயல்பான உடல் செயல்பாடுகளுக்கு விரைவில் திரும்ப உதவுவதற்காக 24 மணி நேரமும் அனுபவமிக்க  மருத்துவ வல்லுநர்கள் இருக்கிறார்கள்.

நோயாளி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படாவிட்டால் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது மற்றும் சேதத்தின் தீவிரம் மீளமுடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவமிக்க நரம்பியல் நிபுணர்கள் (https://www.sriramakrishnahospital.com) பக்கவாதம் மற்றும் அதன் பிரச்சனைகளை  கையாள நிறைய நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை நடைமுறைபடுத்துகிறார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்  சிறந்த நரம்பியல் நிபுணர்களுடன் உங்கள் தேவையை பற்றி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நோயாளி தொலைதூரத்தில் இருப்பவரானால், நோயாளின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி ஆலோசனை ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவார்கள் ஆலோசனையை வழங்குகிறார்கள். பயனுள்ள சிகிச்சையை வழங்க டாக்டர்கள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையாக உள்ளன, மக்களுக்குத் தேவையான நேரத்தில் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்கிறது.

https://www.youtube.com/c/SriRamakrishnaHospital

https://www.facebook.com/SriRamakrishnaHospital

https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital