சென்னை: ஊராட்சி பகுதிகளில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஊராட்சி கட்டுமான அனுமதி அதிகாரம் குறித்து ஏற்கனவே  தமிழக அரசு  அரசாணையை வெளியிட்டு உள்ளது. அதில், 10,000 அடிப்பரப்புக்கு கட்டுமான அனுமதித்தர ஊராட்சிகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டுமானத்துடன் கூடிய குடியிருப்புகளில் வாகன இடம் தொடர்பான அனுமதி குறித்து, இந்திய கட்டுனர்கள்  சங்கமான கிரெடாய் கோவை கிளை, தமிழகஅரசுக்கு விளக்கம் கோரியிருந்தது. கோரிக்கையை அடுத்து  புதிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து,  10,000 அடிப்பரப்புக்கு கட்டுமான அனுமதித்தர ஊராட்சிகளுக்கு அதிகாரம் தரும் அரசாணையை  தொடர்பாக விளக்கம் அளித்து  புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், வாகன நிறுத்துவதற்காக ஒதுக்கப்படும் இடத்துக்கான அனுமதி,  கட்டுமானத்துக்கு  தரப்படும் 10,000 சதுர அடிக்குள்  வராது  என விளக்கமளித்துள்ளது. அதாவது, 10,000 சதுர அடி பரப்பளவு முழுமையும் குடியிருக்கும் பகுதியே குறிக்கும். காலி கீழ்தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட, 12 மீட்டர் உயரமுள்ள 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக்கான கட்டடம் கட்ட மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.