சென்னை: ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடி, கட்சி பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஓபிஎஸ், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என தம்மை ஓபிஎஸ் குறிப்பிடுவது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தினால் ஓபிஎஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.