சென்னை,

யாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வாக்கு தொடர்ந்து.

இந்த வழக்கின் வழக்கின் விசாரணைக்கு  சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று ஆஜரானார். அதையடுத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 3ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான  ஆட்சிக்காலத்தில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு  பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில், சிபிஐ கோர்ட்டில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந்தேதியே  சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையின் நகலை ஜூன் 6ந்தேதி நடைபெற்ற  விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரிடமும் சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

அதையடுத்து, அவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், விசாரணை இழுத்துக்கொண்டே சென்று, தற்போது, அடுத்த மாதம் 3ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்து உள்ளார்.

அன்றைக்காவது குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது யாருக்கு தெரியும்….