18 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்ள போவதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி இரவு திடீரென அறிவித்தார் தனுஷ்.

இது திரையுலகினரை மட்டுமன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் விவாகரத்து செய்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விவாகரத்து முடிவை கைவிட நினைத்திருப்பதாகவும் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து அவர்கள் திருமண நாளான நவம்பர் 18 ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.