கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி,  காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை கவனிக்காமல்,  தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு சென்றுவிடுவதால், சமீப நாட்களாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல், கொலை மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி மேம்பாலம் இறக்கத்தின் கீழ் சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்டு, அதில் இருந்து ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

குற்றவாளிகள்,  ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மோப்ப நாயுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இந்த ஏடிஎம் இயந்திரத்தில்,  நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை  வழக்கம்போல் ஏடிஎம் மையத்தில் சுமார் ரூ.16 லட்சம் பணத்தை நிரப்பிச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற ஸ்ப்ரே அடித்து விட்டு, வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பது தொடர்பாக  அதிகாலை 4 மணியளவில் ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் சென்றுள்ளது. அதன்பிறகு,  கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டிடத் கட்டிடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏடிஎம் மையத்தை பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததுடன், இதுகுறித்து காவல்துறையிலும் புகார்அளித்ததார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  குருபரப்பள்ளி போலீஸார் மற்றும், கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கு, மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதோ போல் சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.