சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாயுடன் விரைந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம போன் வந்தது. போனில்  தொடர்பு கொண்ட மர்ம நபர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி லைனை கட் பண்ணி விட்டார்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் வசித்து வரும் அவரது வீட்டுக்கு விரைந்து சென்ற தேனாம்பேட்டை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் விரைந்துசென்று சோதனை மேற்கொண்டனர். அதுபோல   சென்னை விமான நிலையத்திலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.