சென்னை

நேற்று மற்றும் இன்று சென்னை விமான நிலையத்துக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை என 2 இ மெயில்கள் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  மெயிலில் \சென்னை விமான நிலையத்தில் 5 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை ஒவ்வொன்றாக வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  எனவே அதிகாரிகள், இது தொடர்பாக விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது.

காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பியவரை தேடி வருகின்றனர். மேலும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.   நிலைய அதிகாரிகள் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பு சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.