டிகர் விஜய் சேதுபதி லாபம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல ஹீரோக்கள் படத்தில் வில்லன் வேடத்திலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த அடுத்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். ஆனால் பிரபல ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்க மறுத்து விலகினார்.


தெலுங்கு, தமிழில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடக்கும் படம் ‘புஷ்பா’ என்ற பெயரில் உருவாகிறது. சுகுமார் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென்று கால்ஷீட் பிரச்னையை சொல்லி நடிக்காமல் வெளியேறினார்.

தற்போது அந்த வாய்ப்பு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு கைமாறி இருக்கிறது. இவரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். புஷ்பா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.