விருதுநகர்:

புளுவேல் ஆன்லைன் கேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜெயதீஸ்வரன் என்ற வாலிபர் புளுவேல் ஆன்லைன் கேம் விளையாடினார்.

இதன் விதிப்படி அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.