சென்னை: 
தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 39 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக   கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.