சென்னை

ன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சென்னையில் பாஜக மேலிடக் குழு சந்தித்துள்ளது.

பாஜக தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவினர் மீது அரசியல் பழி வாங்கும் விதத்தில் தி.மு.க. அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டி வருகிறது. எனவே தமிழகத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ய, பாஜக தேசிய தலைமையால் 4 பேர் கொண்ட மேலிட குழு அமைக்கப்பட்டது.

இன்று பாஜக மேலிடக் குழு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார்கள்.

குழுவினர் இந்த சந்திப்பின் போது மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராகப் புனையப்பட்டுள்ள வழக்கு விவரங்கள், அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இணைத்துக் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது . ஆளுநரிடம் தங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மேலிடக் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.