சென்னை

ம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசுலிக்கப்பட்டால் அது குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Sample picture

தீபாவளி பண்டிகையொட்டி சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசுத் தரப்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதையொட்டி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்,

”தமிழக அரசின் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து புகார் அளிக்க 9445014450 மற்றும் 9445014436 ஆகிய எண்களை அழைக்கலாம்.  இதைப் போல் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க 18004256151 என்னும் என்ணை அழைக்கலாம்”

என அறிவித்துள்ளார்.