பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள்

சென்னை:

ருணாநிதி முதலாண்டு நினைவுநாளையொட்டி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்த சில தகவல்களை நினைவு கூர்ந்த நிலையில்  மத்தியஅரசையும்  கடுமையாக சாடினார்.

‘பாஜக அரசு தேசபக்தி என்ற போர்வையில் வகுப்புவாதத்தைத் தூண்டி வருகிறது என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் உரை

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

” தமிழக வரலாற்றில், திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில், ஏன் தனிப்பட்ட முறையில் என்னுடைய வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகஸ்ட் 7 தான். எவரை நாம் உயிர் என்று உடலுக்குள் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தோமோ, அந்த உயிருக்கு இணையான தலைவர் கலைஞர் அவரின் அண்ணனுக்குப் பக்கத்தில் ஓய்வெடுக்கச் சென்ற நாள் இந்நாள்.

அண்ணா மறைந்த நேரத்தில் தந்தை பெரியார் சொன்னார், நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இழக்கக்கூடாதவரை நாம் இழந்திருக்கிறோம் என்றார். கலைஞர் அவர்களும் நம்மைவிட்டுப் பிரிந்த நேரத்தில் அப்படிதான் அந்த உணர்வு ஏற்பட்டது. ஐந்து முறை தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பிலிருந்தது. அதற்கு காரணம் அண்ணா அவர்கள் தான்.

20 ஆண்டு இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர் தான். நாடாளு மன்றத்திற்குச் சென்றது மட்டுமல்ல, அவரது தம்பிமார்களை மத்திய அமைச்சரவையில் அழகு பார்த்தவர். 14 வயதில் தமிழ் கொடி பிடித்தவர். அதனை 96வயது வரை பற்றி பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் பல ஊர்களில் கலைஞர் சிலை திறக்கப்படும். மற்ற இடங்களில் எல்லாம் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிலையைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் முரசொலி அலுவலகத்தில், உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். எழுதுவதுதான் அவருக்கு மிக மிகப் பிடிக்கும். அதுதான் தமிழுக்கும் பிடிக்கும் என்பதால் அதே வடிவில் காட்சி தருகிறார். உயிர்ப்போடு வடிவமைத்த சிற்பி தீனதயாளன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

பொதுக்கூட்ட மேடையில் மம்தாவுக்கு ஸ்டாலின் கருணாநிதி சிலை பரிசு வழங்கிய காட்சி

பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும். அண்ணா என்றால் மொழி மற்றும் இன உணர்வும். கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும். இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைத் தான் நாடு இன்றைக்கும் உணர்த்துக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும், சமூகநீதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் தற்போது உருவாகி உள்ளது. எனவே தான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்.

காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளனர். அந்த சமூக நீதி கொள்கைக்கு உலைவைப்பதற்கு பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்துள்ளார்கள்.

இட ஒதுக்கீடு கொள்கையால், தகுதி, திறமை போய்விட்டதே என்று இதுவரை சொல்லி வந்தவர்கள், இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும், இடஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

அதே போல தான் மாநில சுயாட்சிக் கொள்கையை அழித்துவிட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை, ஒரே தேர்வு என எல்லாவற்றையும் டெல்லியில் குவிக்கிறார்கள்.

மத்திய அரசு என்பது என்று மத்தியப்படுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் 1971ம் ஆண்டே, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார் நமது முத்தமிழறிஞர் கலைஞர்.

இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது ஆட்சியைப் பற்றி கவலைபடவில்லை. ஜனநாயகம் தான் முக்கியம் என்று கூறினார். அந்த துணிச்சலை நாம் இப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை நீக்குவதற்கு தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தினமும் போராடி வருகிறார்கள். இந்த செய்தியைத் தினமும் பார்த்தோமே. கலைஞர் இருந்தி ருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்திருப்பார்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க செய்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல், தபால் தேர்வில் இந்தி, நீட் என பலவற்றைப் பேசுகிறார்களே. அதற்கு தமிழக மக்கள் சார்பாக நான் பாராட்டுகளைத் தெரித்துக் கொள்கிறேன்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொள்ள கூடாது என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் இருக்கும் போது நாங்கள் இந்தியாவின் பக்கம் தான் நின்றோம். எனவே எங்களுக்குத் தேச பக்தி பாடத்தை யாரும் கற்றுத் தர தேவையில்லை.

ஒரு போலி தேசபக்தியை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சனையை தூண்டி விடும் மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க எதிர்க்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு காஷ்மீரில் அமையும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே தி.மு.க நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்ட மேடையில் மம்தாவுக்கு திக தலைவர் கி.வீரமணி பரிசு வழங்கிய காட்சி

திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் புதன்கிழமை, பாஜக தலைமையிலான அரசாங்கம் தேசபக்தி யின் உடையில் வகுப்புவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், அவரது கட்சி அதை எதிர்த்துப் போராடும் என்றும் கூறினார்.

‘ஒரு நாடு-ஒரு தேர்தல்’ மற்றும் பிற கருத்துக்களைக் கொண்ட மத்திய அரசு இப்போது “மையப் படுத்தப்பட்ட அரசாங்கமாக” மாறி வருகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.  “பாஜக அரசாங்கம் தேசபக்தி என்ற போர்வையில் வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது, திமுக அதை எதிர்க்கும்.”

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு ரத்து செய்யப்படக்கூடாது என்று  வலியுறும்திய  ஸ்டாலின் கூறினார். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கும் வரை, ஜம்மு & கே தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

முன்னதாக நாடு போர்களை நடத்தியபோது இந்திய அரசாங்கத்திற்கு திமுக ஆதரவு வழங்கிய தால் யாரும் திமுகவுக்கு தேசபக்தியை கற்பிக்க வேண்டியதில்லை என்றவர்,  ஃபாரூக் அப்துல்லா வின் தந்தையும் ஜே & கே முன்னாள் முதல்வருமான ஷேக் அப்துல்லாவை கைது செய்ததை நினைவு கூர்ந்த ஸ்டாலின், “அந்த கருப்பு வரலாறு இன்று மீண்டும் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.