சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் 49 வழக்குகள் நிலுவையில் உள்ள பாஜக நிர்வாகி வெங்கடேஷுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுத்துள்ளது.

தொழிலதிபர் வெங்கடேஷ் பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவியில் உள்ளார். இவர் மீது செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 வழக்குகள் உள்ள நிலையில், தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

வெங்கடேஷ் தனது மனுவில்,

“நான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய உறவினர் ஒருவரை முத்து சரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு முத்து சரவணன் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், எனக்கு கொலை மிரட்டல் வருவதால், எனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்”

என்று கோரியிருந்தார்.

நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வெங்கடேஷ் செம்மரக் கடத்தல், துப்பாக்கி வைத்துக் கட்டப் பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் உள்ளன.. பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்குக் காவல்துறை பாதுகாப்பு தரக் கூடாது என அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

 வெங்கடேஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.