ஐதராபாத்:

தெலங்கானாவில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பாஜக அறிவித்துள்ளது.

தெலுங்கானா பாஜக தலைவர் லக்‌ஷ்மன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ மோடி முத்திரையுடன் கூடிய நல்லாட்சி தெலுங்கானாவில் உருவாக வேண்டும்.

இதற்காக தெலங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் பாஜக.வில் இணைந்து வருகின்றனர். டில்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.