பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு ஆக்டிவிட்டி ஏறியாவிற்கு வந்தவர்கள் அடிப்படையில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

போட்டியில் நாணயத்தை எடுக்கும்போது மாட்டிக்கொண்ட நிரூப் பிரியங்கா சுருதி ஆகியோர் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் அவரிடமிருந்து வேறு ஒருவர் கைப்பற்றுவதும் மற்றும் காரசாரமான விவாதங்கள் என நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

முதல் ப்ரோமோ : டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளதால் யார் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆவார் என்பது இன்று தெரியவரும்.

இரண்டாவது ப்ரோமோ : “விளையாடு அல்லது வெளியே போ” என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மைக் இல்லாமல் பேசுவது யார்? ஆங்கிலம் பேசுவது, வீட்டில் தூங்கி கொண்டே இருப்பது யார்? என கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இறுதியாக அந்த வாக்கியங்கள் அடங்கிய போர்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் கழுத்தில் மாட்டி கொள்கின்றனர்.

மூன்றாவது ப்ரோமோ : வீட்டின் தலைவர் பதவியை பறித்து உரிமை வெற்றி பெறுபவருக்கு கொடுக்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி இருப்பதால் தற்போது நாணயத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு அதனை விட்டு கொடுப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டின் தலைவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதாலும், நாமினேஷனில் விடுவிக்கப்படுவதாலும் இந்த டாஸ்க் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.