சென்னை

பிக் பாஸ் ஜூலி தனது காதலன் தனது காதலன் மீது காவல்துறையில் மோசடி  புகார் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு  பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி என அழைக்கப்படும் மரியா ஜூலியானா.   இவர் அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 1 போட்டியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார்.  பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுடன் இவர் செய்த தகராறுகள் மற்றும் ஓவியாவைப் பற்றி காயத்ரி ரகுராம் இடம் கோள் முட்டியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் மனீஷ் தன்னை திருமணம் செய்துக் கொளவதாக கூறி பணம் மற்றும் பொருட்களைப் பெற்று மோசடி செய்துள்ளதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.    காதலரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூலி தனது புகாரில் தம்மை மனீஷ் 4 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும் தம்மைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பைக், நகை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  காதலருக்காக தாம் ரூ.2.3 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் ஜூலி தெரிவித்துள்ளார்.