மல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டு 4வது சீசன் தொடங்கிறார். அதற்கான புரோமோ வீடியோக்களும் வெளியிட தொடங்கி விட்டார்.
இந்நிலையில் கமலின் பிக்பாஸ் 4 ஷோவை நடத்த விடமாட்டேன். கோர்ட்டுக்கு போய் தடை வாங்குவேன் என்று டிவிட்டரில் வீடியோ வெளியிட் டிருக்கிறார். . அதில் கூறும்போது, ’கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்து விட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.
கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. அதை காரணமாக வைத்து நீங்கள் என்னை வெளியேற்றி இருக்கக்கூடாது. எனவே உங்கள் மீது நான் தகுந்த நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன். நான் உங்கள் மீது வழக்கும் பதிவு செய்வேன்.நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என தெரிவித்திருகிறார்.