ஈரோடு: பவானி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும்,  அமைச்சருமான கருப்பண்ணன் ஊருக்குள் வரக்கூடாது, அவருக்கு எங்கள் ஓட்டுக்கிடையாது 52  கிராம மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும்,  தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமத்தில் அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு 52 கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பணியை நிறுத்துமாறும் குடியிருப்பை வேறு இடத்தில் கட்டுமாறும் போராட்டம் வெடித்தன. இதை ஆளும் கட்சியும், அந்த பகுதியைச் சேர்ந்த அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இதையொட்டி,அந்த கிராம மக்கள்  தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று  அறிவித்த உள்ளனர். மேலும் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கருப்பண்ணன்தங்கள் பகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு வர கூடாது என்றும் அவர் பணம், பொருள் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று மக்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். விவசாயத்தை அழிக்கும் கருப்பண்னனுக்கு எங்கள் ஓட்டு இல்லை விவசாயக் நில மீட்புக் கூட்டமைப்பு 52 கிராமங்கள் என்ற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த  வருவாய் துறை தேர்தல் பிரிவினர் பேச்சு நடத்தினர், ஆனால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வது உறுதி என கூறி வருவதாக கூறப்படுகிறது.