சென்னை: 
காகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாளாக” கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி “பாரதி இளம் கவிஞர் விருது”  வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.