சென்னை: இளைஞயராஜாவின் புதிய ஸ்டூடியோ திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா, அவருக்கு மலரும் நினைவுகளை அசைப்போடும் வகையிலான புகைப்படம் ஒன்றை பரிசளித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த  30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கிருந்து தனது ஆவணங்களை எடுத்து வந்த இளையராஜா, கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை  உருவாக்கி உள்ளார்.

இதன் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா உள்பட ஏராளமானோர் நேரில்வந்து இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாரதிராஜா, இளைஞராஜாவுடன் பணியாற்றிய காலங்களை நினைவுகூறும்வகையில், அவருடன் இணைந்து எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை இளையராஜாவுக்கு பரிசளித்தார். இதைக்கண்ட இளையராஜா நெகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய ஸ்டூடியோவில், இளையராஜா வெற்றிமாறன் படத்துக்கு இசை அமைக்க உள்ளார்.  கதையின் நாயகனாக சூரி நடிக்கும் இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.