சென்னை: சென்னை விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து காரில் ஏறிய  அமித் ஷா, விமான நிலையம் அருகே தொண்டர்கள் வரவேற்பு கொடுத்ததைத் தொடர்ந்து, சாலையில் இறங்கி நடந்துகொண்டே வரவேற்பை ஏற்றார். அப்போது சாலையோரத்தில் இருந்து அவரை நோக்கி பதாகை வீசப்பட்டது. இதைகண்ட காவலர் ஒருவர் அந்த பதாகையை தடுத்த நிலையில், பதாகை வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.