சென்னை: 
சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அரசாணையில்,  தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்குத் தமிழக அரசின் “முன் மாதிரி கிராம விருது வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்ட அளவில் தேர்வாகும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகையாக 7.5 லட்சமும், மாநில அளவில் தேர்வாகும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா 15 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று  அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.